Connect with us

தமிழ் சினிமா

பிரபாஸுக்காக எழுதப்பட்ட “தனி ஒருவன்” கதை! .. மோகன் ராஜா தகவல்!

‘தனி ஒருவன்’ கதையை நான் பிரபாஸிடம் சொன்னேன்” என இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “2015ம் ஆண்டு நான் பிரபாஸுடன் இணைந்து ஒரு காதல் படம் பண்ணியிருந்தால் என்னுடைய கரியரே வேறொரு பாதைக்கு மாறியிருக்கும்.

அந்த சமயத்தில் நான் காதல் படத்தை இயக்குவதைக் காட்டிலும் காவல் துறை சம்பந்தமான படங்களை இயக்கலாம் என முடிவெடுத்திருந்தேன்.

அப்போதுதான் எனக்கு காதல் படங்களைவிட போலீஸ் கதை தொடர்பான படங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். ‘தனி ஒருவன்’ படத்தை பொறுத்தவரை அது நடிகர் பிரபாஸுக்கான கதையாகத்தான் தொடங்கியது. இதை நான் அவரிடம் சொன்னேன்.

அவர் என்னிடம், ‘நான் இப்போது லவ் ஸ்டோரீஸ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அப்படி எதும் கதை இருக்கிறதா?’ என கேட்டார். அந்த சமயத்தில் விஜய் அழைத்தார். ‘வேலாயுதம்’ படத்தில் பிஸியாகிவிட்டேன்” என்றார்.

Continue Reading
You may also like...
NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top