குழந்தைகளுடன் விபத்துக்கு உள்ளான ரம்பா: என்ன ஆச்சு?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனது குழந்தைகளுடன் நடிகை ரம்பா காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா, கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டதுடன் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான காரின் புகைப்படங்களையும் நடிகை ரம்பா பதிவு செய்துள்ளார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here